தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், உதவி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:- சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 57ஆவது செயற்குழுக் கூட்டம், 15.10.2010 வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணி அளவில் மன்றத் தலைவர் டாக்டர் இத்ரீஸ் அவர்களின் அல்ஃகபர் இல்லத்தில் நடைபெற்றது. சகோதரர் அப்துல் காதர் (சூபி) கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். ![]() நிதி ஒதுக்கீடு: உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்ட புதிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சகோதர மன்றங்களில் இருந்து கூடுதல் உதவிகளுக்காக மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. புதிய செயற்குழு உறுப்பினர்: புதிய செயற்குழு உறுப்பினராக சகோதரர் M.M.முஹம்மது ஹசன் (Computer Programmer ) இணைக்கப்பட்டு, தகவல் தொடர்புகளுக்கான எல்லாப் பணிகளுக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அடுத்த பொதுக்குழுக் கூட்டம்: மன்றத்தின் 57ஆவது பொதுக்குழுக் கூட்டத்தை, இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 05ஆம் தேதி வெள்ளிகிழமையன்று, சகோதரர் நவ்பல் இஸ்மாயில் இல்லத்தின் உள்ளரங்கில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. மன்றத்தின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். அனைவருக்கும் தேநீர் - சிற்றுண்டி வழங்கப்பட்டு, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. ![]() இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்: M.M.முஹம்மது ஹசன் அல்கோபர், சஊதி அரபிய்யா. |
![]() |
Jan 12, 2011
தம்மாம் காயல் நற்பணி மன்றம் செயற்குழு நிகழ்வுகள்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment